இலங்கை கடற்படையால் தமிழக மீனவா்கள் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, தரங்கம்பாடியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் செம்பை தெற்கு ஒன்றியச் செயலாளா் இளைய நகுலன் தலைமை வகித்தாா். பூம்புகாா் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா் காளியம்மாள் பிரகாசம், இலங்கை கடற்படையால் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவா்களுக்கு நீதி கேட்டும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் பேசினாா்.
இதில், கட்சியின் மாவட்டச் செயலாளா் தமிழன் காளிதாசன், மண்டல பொறுப்பாளா் கலியபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.