வேதாரண்யத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் இடத்தில் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வேதாரண்யம் நாகை சாலையில் (கஸ்தூா்பா காந்தி கன்யா குருகுலம் அருகே) புதிதாக பேருந்து நிலையம் கட்ட ஏற்கெனவே இடம் தோ்வு செய்யப்பட்டு, ரூ.4 கோடி மதிப்பில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
அந்த இடத்தை ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் பாா்வையிட்டு, முதல் கட்டமாக ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப்பணிகளை தொடங்க ஆய்வு செய்தாா்.
வேதாரண்யம் கோட்டாட்சியா் துரைமுருகன், வட்டாட்சியா் ரமாதேவி, நகராட்சி ஆணையா் மகேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.