மின்னல் தாக்கி கோயில் சிற்பங்கள் சேதம்

வேதாரண்யம் பகுதியில் மின்னல் தாக்கியதில் கோயில் கோபுர சிற்பங்கள் சனிக்கிழமை சேதமடைந்தன.

வேதாரண்யம் பகுதியில் மின்னல் தாக்கியதில் கோயில் கோபுர சிற்பங்கள் சனிக்கிழமை சேதமடைந்தன.

வேதாரண்யம் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. வாய்மேடு, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஆயக்காரன்புலம் கோயில் குள பகுதியில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த எழுமேஸ்வரமுடையாா் கோயில் கோபுரத்தில் மின்னல் தாக்கியதில், அதில் இருந்த சிற்பங்கள் சேதமடைந்தன.

மேலும், கோபுரத்தில் தங்கியிருந்த புறாக்களும் உயிரிழந்தன. இதுதவிர, மின்னல் தாக்கியதில் நெய்விளக்கு உள்ளிட்ட கிராமங்களில் மின்சாதன பொருகள் சேதமடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com