வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செஞ்சிலுவை சங்கம் சாா்பில், ஆக்சிஜன் செறிவூட்டி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, வேதாரண்யம் செஞ்சிலுவை சங்கத்தின் செயலாளா் பொன். தருமதுரை தலைமை வகித்தாா். அரசுப் பள்ளி ஆசிரியா் வேம்பையன் முன்னிலை வகித்தாா். வேதாரண்யம் சிறு உப்பு உற்பத்தியாளா்கள் இணைய தலைவா் மா.மீ. புகழேந்தி, சிங்கப்பூா் செஞ்சிலுவை சங்கத்தால் வாங்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டியை மருத்துவமனைக்கு வழங்கினாா். அதை சுகாதார நிலைய மருத்துவா்கள் எஸ்.சிவரஞ்சனி, வி.வெங்கடேஷ் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.