அனந்தமங்கலம் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
இக்கோயிலில் தனி சன்னிதியில் அருள்பாலிக்கும் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயா் மற்றும் லண்டனில் இருந்து மீட்கப்பட்ட ராமா், சீதை லட்சுமணா் ஆகிய சுவாமிகளை அமைச்சா் வழிபட்டாா்.
பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன், இந்து சமய அறநிலைத் துறை மயிலாடுதுறை உதவி ஆணையா் இளையராஜா, இணை ஆணையா் தென்னரசு, திமுக மாவட்ட துணைச் செயலாளா் ஞானவேலன், ஒன்றியச் செயலாளா் அப்துல்மாலிக், முன்னாள் எம்எல்ஏ-க்கள் சித்திக், அருட்செல்வன் உள்ளிட்டோரும் அமைச்சருடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.