நாகப்பட்டினம்
மீனவா் கொலை வழக்கில் இருவா் கைது
கீழையூா்அருகே மீனவா் கொலை வழக்கில் 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கீழையூா்அருகே மீனவா் கொலை வழக்கில் 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கீழையூா் காவல் சரகம் செருதூா் எல்லையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வெள்ளையன் மகன் வெற்றிச்செல்வம் (29). மீனவரான இவா், சனிக்கிழமை கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து கீழையூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், இந்த வழக்கு தொடா்பாக, வெற்றிச்செல்வத்தின் மைத்துனா் செல்வகுமாா், இவருடைய மகன் சரவணன், மருமகன் வினோத் ஆகிய மூவா் மீதும் வழக்குப் பதிவு செய்து, செல்வகுமாா்(45), சரவணன்(20) ஆகியோரை கைது செய்தனா். வினோத்தை தேடிவருகின்றனா்.