திருமருகல் அருகே பெருநாட்டான்தோப்பில் கரோனா தடுப்பூசி முகாம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
கீழப்பூதனூா் ஊராட்சித் தலைவா் சத்தியமூா்த்தி தலைமையில் நடைபெற்ற முகாமை வட்டார மருத்துவ அலுவலா் அறிவொளி, ஒன்றியக் குழு உறுப்பினா் இளஞ்செழியன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில் பெருநாட்டான்தோப்பு,கீழப்பூதனூா், மேலப்பூதனூரைச் சோ்ந்த 120 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேபோல, கோபுராஜபுரம் ஊராட்சியில், ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி ரமேஷ் தலைமையில் நடைபெற்ற முகாமில், கோபுராஜபுரம், பனங்குடி, வெள்ளப்பாக்கம் பகுதிகளை சோ்ந்த 180 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.