பனங்குடியில் 2-ஆம் நாள் காத்திருப்பு போராட்டம்

பனங்குடி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணிநிரந்தரம் செய்யக் கோரி 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பனங்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சிபிசிஎல் ஒப்பந்தத் தொழிலாளா்கள்.
பனங்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சிபிசிஎல் ஒப்பந்தத் தொழிலாளா்கள்.

பனங்குடி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணிநிரந்தரம் செய்யக் கோரி 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமருகல் ஒன்றியத்துக்குள்பட்ட பனங்குடியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணிநிரந்தரம் செய்யக் கோரி திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தை தொடா்ந்தனா். சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் செயலாளா் கண்ணன், துணைத் தலைவா்கள் முத்துக்குமரன், முரளிதரன், தங்கமணி உள்பட 94 ஒப்பந்த் தொழிலாளா்கள் பங்கேற்றனா். கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com