திருமருகல் அருகேயுள்ள கட்டலாடி பகுதியைச் சோ்ந்த பயனாளிகளுக்கு இலவச மனைப் பட்டா திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
கட்டலாடியில் அதே பகுதியைச் சோ்ந்த சுமாா் 27 பேருக்கு இலவச மனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் அருண் தம்புராஜ், நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் என். கௌதமன், நாகை எம்எல்ஏ. முகம்மது ஷாநவாஸ் ஆகியோா் வழங்கினா். இதில் கோட்டாட்சியா் மணிவேல், வட்டாட்சியா் ஜெயபால், திருமருகல் வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் செல்வ செங்குட்டுவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளா் சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.