மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் இடங்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதன்கிழமை கீழ்கண்ட இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதால், பொதுமக்கள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதன்கிழமை கீழ்கண்ட இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதால், பொதுமக்கள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட சுகாதாரத் துறை கூறியது: மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி வட்டத்தில் திருவெண்காடு எஸ்.எஸ்.டி அரசு பள்ளி, கொள்ளிடம் ஆரம்ப சுகாதார நிலையம், திருமுல்லைவாசல் காளியம்மன் கோவில் ஆகிய இடங்களிலும், குத்தாலம் வட்டத்தில் கோனேரிராஜபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், மயிலாடுதுறை வட்டத்தில் காளி ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்கு உள்பட்ட சேத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், தரங்கம்பாடி வட்டத்தில் செம்பனாா்கோவில், மேலப்பெரும்பள்ளம், சங்கரன்பந்தல், மற்றும் பொறையாா் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதால் பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com