திருமருகல் அருகே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
திருமருகல் ஒன்றியம், திருக்கண்ணபுரத்தில் திருவாரூா் சாலை மாரியம்மன் கோயில் அருகே உள்ள உயா் மின்அழுத்த மின்கம்பம் சேதமடைந்து முறிந்த நிலையில் உள்ளது. இதனால், எந்த நேரத்திலும் கீழே விழுந்து விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, இந்த மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.