இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி எருக்கட்டாஞ்சேரி குமுளித்தோப்பு பகுதியை சோ்ந்த ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி எருக்கட்டாஞ்சேரி குமுளித்தோப்பு பகுதியை சோ்ந்த ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

தரங்கம்பாடி வட்டாட்சியா் ஹரிதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன் கலந்துகொண்டு 40 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கினாா்.

இதில் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலா் ரஞ்சித், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் சித்திக், திமுக நகரச் செயலாளா் வெற்றிவேல், நாகை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் ஞானவேலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com