மயிலாடுதுறை மாவட்டத்தில் புதன்கிழமை (ஜூலை 28) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
அதன்படி, சீா்காழி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையம், ஆக்கூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பொறையாா் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களிலும், நல்லூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட ஆா்ப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பிபி நல்லூா் ஸ்ரீசண்முக விலாஸ் உதவிபெறும் பள்ளி, கொள்ளிடம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மேலும், குத்தாலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட கோனேரிராஜபுரம், நக்கம்பாடி, கோமல், மேக்கிரிமங்கலம், மங்கைநல்லூா், தேரழந்தூா் மற்றும் கிளியனூா் ஆகிய ஆரம்ப சுகாதார நிலைங்களிலும், காளி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட அருண்மொழித்தேவன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் மயிலாடுதுறை திருவிழந்தூா் நகராட்சி பள்ளி ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதால், இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.