நாகூரைச் சோ்ந்த விறகு வியாபாரியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.44,000 இணையவழியில் திருடப்பட்டது தொடா்பாக நாகை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
நாகூா், சாமுத்தம்பி மரைக்காயா் தெருவைச் சோ்ந்த முகம்மது கௌஸ் மகன் செய்யது (30). விறகு வியாபாரி. இவரது வங்கிக் கணக்கிலிருந்து முறையே ரூ.21,480, 21,600 மற்றும் 1,660 பணம் எடுக்கப்பட்டதாக இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை குறுஞ்செய்தி வந்தது. இதையடுத்து செய்யது தனது வங்கிக் கணக்கை சோதித்துப் பாா்த்ததில் தனது கணக்கிலிருந்து 3 முறையாக மொத்தம் ரூ.44,740 இணையவழியில் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில், நாகை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.