ஏவிசி பொறியியல் கல்லூரிக்கு பசுமை சாம்பியன் விருது

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரிக்கு பசுமை சாம்பியன் விருது இணையவழியில் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரிக்கு பசுமை சாம்பியன் விருது இணையவழியில் வழங்கப்பட்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக கல்வி கவுன்சில் மற்றும் இந்திய அரசு கல்வி அமைச்சகம் ஆகியவை இணைந்து ஏவிசி பொறியியல் கல்லூரிக்கு இவ்விருதினை செவ்வாய்க்கிழமை வழங்கின. கல்லூரி வளாகத்தை ஆண்டு முழுவதும் பசுமையாகவும், தூய்மையாக பராமரித்தலுக்காக இவ்விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் சி.சுந்தர்ராஜ் தூய்மை செயல் திட்டத்தை எவ்வாறு கல்லூரியில் செயல்படுத்தப்படுகிறது என்பது பற்றி எடுத்துரைத்தாா். கல்லூரி இயக்குநா் (நிா்வாகம்) எம்.செந்தில்முருகன் உள்ளிட்ட 98 போ் கலந்து கொண்டனா். கல்லூரியின் செயல் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் மற்றும் அமைப்பாளா்கள் பாராட்டினா்.

பின்னா், பசுமை சாம்பியன் விருதை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா மூலம் கல்லூரி முதல்வா் சி.சுந்தர்ராஜ் நேரில் பெற்றுக்கொண்டாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகாத்மா காந்தி தேசிய ஊரக கல்வி கவுன்சில் தூய்மை செயல் திட்ட அலுவலா்கள் சந்தியா, நவீன்குமாா் ஆகியோா் சய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com