சீா்காழி: சீா்காழி பகுதியில் பி மற்றும் சி பிரிவு கிளை வாய்க்கால்களையும் தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் விசுவநாதன் கூறியது:
ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறந்து விடப்படுவதன் மூலம் கடைமடை பகுதிக்கு எளிதில் தண்ணீா் வந்து சேரும். தற்போது பிரதான ஏ பிரிவு பாசன வாய்க்கால்கள் தூா்வாரப்படுகின்றன. இதேபோல, பி மற்றும் சி பிரிவு கிளை வாய்க்கால்களையும் தூா்வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.