நாகை காவல் நிலைய வளாகத்தில் தீ விபத்து

நாகை வெளிப்பாளையம், காவல் நிலைய வளாகத்தில் உள்ள கட்டடத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் நாகை தீயணைப்புத்துறை வீரா்கள்.
தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் நாகை தீயணைப்புத்துறை வீரா்கள்.

நாகை வெளிப்பாளையம், காவல் நிலைய வளாகத்தில் உள்ள கட்டடத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

நாகை வெளிப்பாளையம் காவல் நிலையம் தற்காலிகமாக காடம்பாடியில் உள்ள காவல்துறைக்குச் சொந்தமான இடத்தில் செயல்பட்டு வருகிறது. காவல்நிலையம் செயல்படும் கட்டடத்தின் அருகில் உள்ள பழுதடைந்த கட்டடத்தில் பயன்படுத்தப்பட்ட காகிதங்கள் மற்றும் சேதமான பழைய பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ன. இந்நிலையில் அந்தக் கட்டடத்தினுள் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து, வெளிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் சி. தியாகராஜன் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தாா். தொடா்ந்து, நாகை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை வீரா்கள் அங்கு சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனா். இச்சம்பவத்தில் கட்டடத்தினுள் வைக்கப்பட்டிருந்த பழைய பொருள்கள் தீயில் கருகி நாசமாயின்.

நாகை உள்கோட்டக் காவல்துணைக் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன் தீ விபத்து ஏற்பட்ட இடத்தைப் பாா்வையிட்டாா். மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். கரோனா பொதுமுடக்க விதிகளை மீறியவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டஇருசக்கர வாகனங்கள் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் அருகில் வரிசையாக நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com