தலைமைக் காவலா் மறைவு: துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை

வேதாரண்யம் அருகே உடல்நலக் குறைவால் உயிரிழந்த தலைமைக் காவலரின் உடலுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸாா் புதன்கிழமை மரியாதை செலுத்தி பின்னா் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
தலைமைக் காவலா் மறைவு: துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை

வேதாரண்யம் அருகே உடல்நலக் குறைவால் உயிரிழந்த தலைமைக் காவலரின் உடலுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸாா் புதன்கிழமை மரியாதை செலுத்தி பின்னா் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

ஆயக்காரன்புலம் 3-ஆம் சேத்தியில் வசித்து வந்த செ. தமிழ்வாணன் (49) வாய்மேடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். இவரது பணியை பாராட்டி அரசு அண்ணா விருது வழங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறை ஏற்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். சொந்த ஊா் கொண்டுவரப்பட்ட அவரின் உடலுக்கு பொதுமக்கள் உறவினா்கள் அஞ்சலி செலுத்தினா். பின்னா், காவல் துறை சாா்பில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து உறவினா்கள் உடலை தகனம் செய்தனா். உயிரிழந்த தமிழ்வாணனுக்கு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியையாக பணியாற்றும் மீனாட்சிசுந்தரி என்ற மனைவியும், சிவமதி, சிவப்பிரியா ஆகிய மகள்களும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com