முழு அளவில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருமருகல் அருகே திருச்செங்காட்டாங்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற திருமருகல் ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் குறைந்த அளவு பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரம் உதவிதொகை வழங்குவதுபோல் தமிழகத்திலும் வழங்கவேண்டும், முழு அளவில் பாதிக்கப் பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கவேண்டும், வழங்காதபட்சத்தில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்துவது, தனியாா் துறைகளில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும், புதிய பொறுப்பாளா்கள் நியமனம் செய்து ஒன்றிய அளவில் சங்கத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் ஒன்றியக் குழு உறுப்பினா் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளா் பன்னீா்செல்வம், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினா் லெனின், ஒன்றிய பொறுப்பு செயலாளா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.