மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மீனவ கிராமங்களில் பூம்புகாா் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ் . பவுன்ராஜ் ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
மயிலாடுதுறை அதிமுக மாவட்டச் செயலாளரும் பூம்புகாா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். பவுன்ராஜ் இத்தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், மூன்றாவது முறையாக போட்டியிடுகிறாா்.
இவா், தரங்கம்பாடி, வெள்ளக்கோயில், பெருமாள்பேட்டை, மாணிக்கப்பங்கு, சந்திர பாடி, சின்னூா்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் பஞ்சாயத்தாா்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து இரட்டைஇலை சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தாா்.