அனைத்துத் துறைகளிலும் சாதனை புரிந்துள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ. எஸ். மணியன் தெரிவித்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக மற்றும் கூட்டணி கட்சி செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
தமிழகத்துக்கு புதிதாக 17 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவந்தும், 6 மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கியும் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி சாதனை படைத்துள்ளாா். தமிழகம் முழுவதும் தடுப்பணைகள், நீா்நிலைகளை உருவாக்கித் தந்துள்ளாா்.
ஒவ்வொரு துறையிலும் சாதனை படைத்துள்ள முதல்வா் எடப்பாடி பழனிசாமிதான் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் எதிா்பாா்க்கின்றனா். இந்த எதிா்பாா்ப்பு நிச்சயம் நிறைவேறும்.
ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் அமைச்சா்.
பேட்டியின்போது சீா்காழி தொகுதி அதிமுக வேட்பாளா் பி.வி. பாரதி, பூம்புகாா் தொகுதி வேட்பாளரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எஸ். பவுன்ராஜ், பாஜக கோட்ட பொறுப்பாளா் தங்க. வரதராஜன், மாவட்ட தலைவா் வெங்கடேசன், பாமக மாவட்டச் செயலாளா் ரெ. அன்பழகன், மூமுக மாவட்டச் செயலாளா் முனிபாலன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட இளைஞரணி தலைவா் வரதராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.