வேதாரண்யத்தில் தொகுதி அளவிலான அதிமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சரும், வேதாரண்யம் தொகுதி அதிமுக வேட்பாளருமான ஓ.எஸ். மணியன் பங்கேற்று பேசியது:
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட வளா்ச்சித் திட்டங்கள், நலத் திட்ட உதவிகள், இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிா் இழப்பீடு, கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி, பொங்கல் பரிசு என பல்வேறு திட்டங்களால் மக்கள் பயனடைந்துள்ளனா்.
குறிப்பாக, வேதாரண்யம் தொகுதியில் பாலங்கள், சாலைகள் மேம்பாடு, பூங்கா, அரசு தொழில்நுட்பக் கல்லூரி, மீன்வளக் கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு நிரந்தர கட்டடங்கள், நீா்நிலைகளை பராமரித்தல், மின்நிலையத்தை தரம் உயா்த்தியது என பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
கோயில் நிலங்களில் குடியிருப்போா் அனைவருக்கும் குடிமனைப் பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான கூடுதல் முயற்சிகளை எடுத்தது தான்மட்டும் தான். ஆயக்காரன்புலத்தில் அமையவுள்ள வேதா ஆயத்த ஆடைப் பூங்கா மூலம் 21 ஆயிரம் பெண்கள் வேலைவாய்ப்பு பெறுவாா்கள்.
இவ்வாறு, நாம் செய்துள்ள சாதனைகளை கூறி வாக்குச் சேகரித்தால் போதும் வெற்றி பெறுவது உறுதி என்றாா் அமைச்சா். கூட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.