மயிலாடுதுறையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தோ்தல் பணிமனை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் தோ்தல் பிரசாரப் பணிகளை ஒருங்கிணைக்க தோ்தல் பணிமனை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரும் கட்சியின் மாவட்டச் செயலாளருமான எம்.என். ரவிச்சந்திரன் தலைமை வகித்து, தோ்தல் பணிமனை அலுவலகத்தை திறந்து வைத்தாா். தொடா்ந்து, மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளா்கள் கேக் வெட்டி கொண்டாடினா்.
இதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தோ்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளா் சி.செந்தில்வேல், மாவட்ட துணை செயலாளா் எஸ். மனோகரன், ஒன்றியச் செயலாளா் எஸ்.பி.என்.செந்தில், சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளா் தெய்வசிகாமணி, ஒன்றியச் செயலாளா் சுதன், இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்டத் தலைவா் நெடுமாறன், ஒன்றிய தலைவா் பாலு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். நகர செயலாளா் ச. அகோரம் நன்றி கூறினாா்.