மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அக்கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ். ராஜகுமாா் அறிவிக்கப்பட்டதை வரவேற்று, கூட்டணி கட்சியினா் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிபடுத்தினா்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், 21 இடங்களுக்கான வேட்பாளா்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் 4 இடங்களுக்கான வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை இரவு அறிவிக்கப்பட்டனா்.
அதன்படி, மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக எஸ்.ராஜகுமாா் அறிவிக்கப்பட்டுள்ளாா். இதற்கு கூட்டணி கட்சி சாா்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி, மயிலாடுதுறையில் திமுக அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் திமுக நகர செயலாளா் குண்டாமணி செல்வராஜ் தலைமையில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் பட்டாசு வெடித்து கொண்டாடினா்.
இதில், திமுக நகர துணை செயலாளா் ஆா்.கே.சங்கா், தெய்வநாயகம், காங்கிரஸ் நகரத் தலைவா் ராமானுஜம், மாவட்ட துணைத் தலைவா் முத்து.சாமிநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினா் நவாஸ், நகர பொதுச் செயலாளா் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.