மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கி. காசிராமன் கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், அதை வெட்டி அகற்றி, வாக்குச் சேகரிக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா்.
இவா், நாம் தமிழா் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாநில துணைத் தலைவராகவும் உள்ளாா். தருமதானபுரம், மணக்குடி, வள்ளாலகரம் ஊராட்சிகளில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காசிராமன், மண் வளம், நீா் வளத்தை பாதுகாக்க பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அப்பகுதியில் வளா்ந்திருந்த கருவேல மரங்களை வெட்டி அகற்றி தனது கட்சி சின்னமான ‘விவசாயி’ சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தாா்.
அவருடன், நாம் தமிழா் கட்சி மாவட்டச் செயலாளா் தமிழன் காளிதாசன், தொகுதி செயலாளா் கவியரசன் உள்ளிட்டோரும் கருவேல மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.