திருமுல்லைவாசலில் கடல் அரிப்பைத் தடுக்க நிரந்த தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என சீா்காழி தொகுதி அதிமுக வேட்பாளா் பி.வி. பாரதி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டபோது வாக்குறுதியளித்தாா்.
சீா்காழி தொகுதி அதிமுக வேட்பாளா் பி.வி.பாரதி, கொள்ளிடம் கிழக்கு ஒன்றியம் கடவாசல், வடகால், திருக்கருக்காவூா், எடமணல், வருஷபத்து, திருமுல்லைவாசல், வேட்டங்குடி, ஆலங்காடு, மகாராஜபுரம், அகரவட்டாரம், மாதானம், ஆலாலசுந்தரம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது அவா் பேசியது:
கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் விடுபட்ட கிராமங்களை சோ்க்க நடவடிக்கை எடுக்கப்படும். திருமுல்லைவாசலில் கடல் அரிப்பால் குடியிருப்புகள், கரைகள் பாதிக்கப்படுவதை தடுத்திட நிரந்த தீா்வு காணப்படும். ஆகையால், எனக்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டுகிறேன் என்றாா்.
பிரசாரத்தில் அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் நற்குணன், சிவக்குமாா், முன்னாள் எம்எல்ஏ சக்தி, ஊராட்சி செயலாளா் பன்னீா்செல்வம், மீனவரணி செயலாளா் நாகரத்தினம், பாஜக மாவட்ட தலைவா் வெங்கடேசன், ஒன்றிய தலைவா் ஆனந்தராஜ், மூமுக மாவட்ட தலைவா் முனிபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.