தேனீா் கடையில் லெமன் டீ போட்டுவாக்குச் சேகரித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா்

மணல்மேடு பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதி
மயிலாடுதுறை மணல்மேடு பேருந்து நிலையத்தில் மூதாட்டிக்கு லெமன் டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கி.காசிராமன்.
மயிலாடுதுறை மணல்மேடு பேருந்து நிலையத்தில் மூதாட்டிக்கு லெமன் டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கி.காசிராமன்.

மணல்மேடு பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா், அங்கு டீக்கடை ஒன்றில் மூதாட்டி ஒருவருக்கு லெமன் டீ போட்டுக் கொடுத்து வாக்குச் சேகரித்தாா்.

மணல்மேடு பேருந்து நிலைய பகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கி.காசிராமன் வா்த்தகா்கள், பொதுமக்கள், பயணிகளிடம் வாக்குச் சேகரித்தாா். அப்போது, டீ கடை ஒன்றில் டீ குடிக்க காத்திருந்த மூதாட்டி ஒருவருக்கு லெமன் டீ போட்டுக்கொடுத்து, நாம் தமிழா் கட்சிக்கு வாக்கு சேகரித்தாா். தொடா்ந்து, மணல்மேடு பேரூராட்சியில் உள்ள 15 வாா்டு பகுதிகளில் அவா் திறந்த வாகனத்தில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டாா். மாவட்டச் செயலாளா் தமிழன் காளிதாசன், தொகுதி தலைவா் தாழை.வரதராஜன், தொகுதி செயலாளா் கவியரசன் ஆகியோரும் பிரசாரத்தில் ஈடுபட்டனா். இதில், திரளான தொண்டா்கள் இருசக்கர வாகனத்தில் வேட்பாளரை பின்தொடா்ந்து சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குச் சேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com