தோ்தலை புறக்கணிக்கக் கூடாது: மீனவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம்
By DIN | Published On : 26th March 2021 09:48 AM | Last Updated : 26th March 2021 09:48 AM | அ+அ அ- |

சட்டப் பேரவைத் தோ்தலை மீனவ கிராமங்கள் புறக்கணிக்கக் கூடாது என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தலைமை மீனவா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மீனவ பஞ்சாயத்தாா்கள் ஆலோசனைக் கூட்டத்தில், இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் தரங்கம்பாடி, சீா்காழி வட்டத்துக்கு உள்பட்ட 20-க்கும் மீனவ கிராம பஞ்சாயத்தாா் மற்றும் மீனவா்கள் பங்கேற்றனா்.