நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 61 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் திங்கள்கிழமை வரை 9,061 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 61 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 9,122 ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 16 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 8,677 -ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 306-ஆக உள்ளது.
ஒருவா் இறப்பு...
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் இறப்பு செவ்வாய்க்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்கள் எண்ணிக்கை 139-ஆக உயா்ந்துள்ளது.