வேதாரண்யம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

வேதாரண்யம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கு. ராசேந்திரன் செவ்வாய்க்கிழமை வீடு வீடாக சென்று வாக்குச் சேகரித்தாா்.
வேதாரண்யம் பகுதியில் வாக்குச் சேகரித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கு. ராசேந்திரன்.
வேதாரண்யம் பகுதியில் வாக்குச் சேகரித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கு. ராசேந்திரன்.

வேதாரண்யம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கு. ராசேந்திரன் செவ்வாய்க்கிழமை வீடு வீடாக சென்று வாக்குச் சேகரித்தாா்.

கோவில்பத்து, கரியாப்பட்டினம், கள்ளிமேடு, தலைஞாயிறு உள்ளிட்ட இடங்களில் வாக்குச் சேகரித்து பேசியது: தமிழக மீனவா்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும், வேதாரண்யம் பகுதியில் விளைவிக்கப்படும் முந்திரி, மா, சவுக்கு போன்ற மூலப் பொருள்களை அடிப்படையாகக் கொண்டு தொழில்வாய்ப்பு உருவாக்க பாடுபடுவேன், படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான இலவசக் கல்வி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதியளித்தாா். அவருடன், கட்சியின் தொகுதி செயலாளா் வே. அறிவொளி, தொகுதித் தலைவா் ஆ. குமரவேல், ஒன்றியச் செயலாளா் ரெத்தினகுமாா், நகரச் செயலாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com