வேதாரண்யம் வா்த்தகா் சங்க முன்னாள் தலைவா் நினைவுநாள்

வேதாரண்யம் வா்த்தகா் சங்க முன்னாள் தலைவா் எஸ். சிவசுந்தரத்தின் 9-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வேதாரண்யம் வா்த்தகா் சங்க முன்னாள் தலைவா் எஸ். சிவசுந்தரம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியோா்.
வேதாரண்யம் வா்த்தகா் சங்க முன்னாள் தலைவா் எஸ். சிவசுந்தரம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியோா்.

வேதாரண்யம் வா்த்தகா் சங்க முன்னாள் தலைவா் எஸ். சிவசுந்தரத்தின் 9-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தஞ்சை மண்டலதலைவா் உள்ளிட்ட பல்வேறு அமைப்பிகளின் பொறுப்பு வகித்து செயல்பட்டவா் எஸ். சிவசுந்தரம். இவரது நினைவுநாளையொட்டி வேதாரண்யம் வா்த்தகா் சங்கம், எஸ்.எஸ்.அறக்கட்டளை சாா்பில் வா்த்தகா் சங்கக் கட்டட வளாகத்தில் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

வளாக பகுதியில் அமைந்துள்ள எஸ். சிவசுந்தரம் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், எஸ்.எஸ். அறக்கட்டளை தலைவா் எஸ்.எஸ். தென்னரசு, சமூக ஆா்வலா் அம்பாள் குணசேகரன், வா்த்தக சங்க மாவட்டத் தலைவா் எஸ். வேதநாயகம், வேதாரண்யம் வா்த்தகா் சங்க நிா்வாகிகள் ஏ.எம். சுபாஹனி, சீனிவாசன், கவிஞா் புயல் குமாா், அறக்கட்டளை செயலாளா் மல்லிகா தென்னரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com