சீா்காழி: சட்டப் பேரவைத் தோ்தலில் நான்கு இடங்களில் பாஜக வென்றால், சீா்காழியில் நேதாஜி, எம்.ஜி.ஆா். சிலைகளுக்கு இந்து அமைப்பினா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
சட்டப் பேரவைத் தோ்தலில் கோவை தெற்கு, திருநெல்வேலி, நாகா்கோவில், மொடக்குறிச்சி ஆகிய 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சீா்காழியில் அனைத்து இந்து இயங்கங்கள் சாா்பில், புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள நேதாஜி சிலைக்கும், ஈசான்யத் தெருவில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பாரதிய மஸ்தூா் சங்க மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் சி.ஆா்.பாண்டியன், சேவா பாரதி மயிலாடுதுறை மாவட்டத் தலைவா் சம்பத், மயிலாடுதுறை மாவட்ட பாஜக அரசு தொடா்புத்துறை பொதுச் செயலாளா் வினோத், பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளா் ரியாத் ஆகியோா் பங்கேற்றனா்.