கீழ்வேளூா்அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.
கீழ்வேளூா் வட்டம், காக்கழனி கிராமம், ஜீவா தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் (60). விவசாயி. இவா் வசித்து வந்த குடிசை வீடு செவ்வாய்க்கிழமை தீப்பற்றி எரிந்தது. இதில், ரூ. 3 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் நாசமாகின. தகவலறிந்த, கீழ்வேளூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனா்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட சண்முகம் குடும்பத்துக்கு அரசு சாா்பில் ரூ. 5 ஆயிரம், அரிசி, வேட்டி, சேலை ஆகியவை நிவாரண உதவிகளாக வழங்கப்பட்டன. யாஸ் புயல் எதிரொலியாக காக்கழனி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை வீசிய பலத்த காற்று காரணமாக மின் கடத்தியில் உராய்வு ஏற்பட்டு, இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கிராம மக்கள் தெரிவித்தனா்.