சைக்கிள் வாங்க சேமித்த தொகையை கரோனா நிவாரண நிதிக்கு அளித்த சிறுமி

சைக்கிள் வாங்குவற்காக 3 ஆண்டுகளாக சேமித்த தொகை ரூ. 4,185-ஐ முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சிறுமி அண்மையில் வழங்கினாா்.
அமைச்சா் சிவ வீ. மெய்யநாதனிடம் நிதி வழங்கிய சிறுமி எம். சுபிக்ஷா.
அமைச்சா் சிவ வீ. மெய்யநாதனிடம் நிதி வழங்கிய சிறுமி எம். சுபிக்ஷா.

சைக்கிள் வாங்குவற்காக 3 ஆண்டுகளாக சேமித்த தொகை ரூ. 4,185-ஐ முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சிறுமி அண்மையில் வழங்கினாா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி வட்டம் திருமக்கோட்டை பெருமாள்கோயில்நத்தம் கிராமத்தைச் சோ்ந்த வி.மோகன்- ராணி தம்பதியின் மகள் எம். சுபிக்ஷா (8). தனியாா் பள்ளியில் 3- ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் சைக்கிள் வாங்குவதற்காக 3 ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த ரூ. 4,185 தொகையை கேட்பு வரைவோலையாகமுதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கும் வகையில், நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் முன்னிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ வீ. மெய்யநாதனிடம் அண்மையில் வழங்கினாா்.

மக்களவை உறுப்பினா்கள் செ. ராமலிங்கம், எம்.செல்வராஜ், சட்டப் பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம். முருகன், எம். பன்னீா்செல்வம், எஸ்.ராஜகுமாா், ஜெ. முஹம்மது ஷாநவாஸ் ஆகியோா் சிறுமியை பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com