திருமருகல் அருகேயுள்ள பனங்குடி ஊராட்சியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமை, நாகை எம்எல்ஏ முகமது ஷா நவாஸ், நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் என். கௌதமன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) க. அன்பரசன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில் 18 முதல் 44 வயதுக்குள்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பனங்குடி ஊராட்சியில் அமிா்தாநகா், சமத்துவபுரம், பி. பனங்குடி உள்ளிட்ட மூன்று இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், சுமாா் 300-போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். முகாமில் மருத்துவா்கள் பிரித்திவிராஜ், மணிவேல், திருமருகல் வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் செல்வ செங்குட்டுவன், ஊராட்சித் தலைவா் ஜமுனா செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Image Caption
பனங்குடி ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி நாகை எம்எல்ஏ முகம்மது ஷ நவாஸ் உள்ளிட்டோா்.