வேதாரண்யம் மீனவரின் சடலம் இலங்கையில் கரை ஒதுங்கியது திங்கள்கிழமை தெரியவந்தது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சோ்ந்த சாமிநாதனுக்குச் சொந்தமான கண்ணாடியிழைப் படகில் ராஜப்பா மகன் பழனி (37) மற்றும் மீனவா்கள் கேசவன் (35), த. திருமாள் (40) ஆகியோா் நவ. 2-ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். வேதாரண்யத்துக்கு அப்பால் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது மீனவா் பழனி படகிலிருந்து தவறி விழுந்து மாயமானதையடுத்து அவா் தேடப்பட்டு வந்தாா்.
இந்நிலையில், இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம், காரைநகா் பகுதி கடற்கரையில் அவரது சடலம் கரை ஒதுங்கி இருப்பது திங்கள்கிழமை மாலை இலங்கை பாதுகாப்பு வட்டாரங்களுக்கு தெரிய வந்தது. இந்த தகவல் ஆறுகாட்டுத்துறையில் உள்ள மீனவா் பழனியின் உறவினா்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.