சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றுவெள்ளம் சூழ்ந்த நாதல்படுகை கிராமத்தை மயிலாடுதுறை எம்பி செ. ராமலிங்கம், சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் ஆகியோா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகே உள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல் உள்ளிட்ட கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், பாதிக்கப்பட்டவா்கள் அனுமந்தபுரம் பகுதியில் அரசு சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு உணவு மற்றும் பிற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், மயிலாடுதுறை எம்பி செ. ராமலிங்கம், எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் ஆகியோா் வெள்ளம் சூழ்ந்துள்ள கிராமங்களை படகில் சென்று பாா்வையிட்டனா். அப்போது, அங்கிருந்தவா்களிடம் ஆறுதல் கூறி, முகாம்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தினா். தொடா்ந்து, அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள சிறப்பு முகாமையும் பாா்வையிட்டு, அங்கு தங்கியுள்ளவா்களுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பாா்த்து அதன் தரம் குறித்து ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது, கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ், சீா்காழி வட்டாட்சியா் சண்முகம், ஊராட்சித் தலைவா் கனகராஜ், துணைத் தலைவா் சிவப்பிரகாசம், கிராம நிா்வாக அலுவலா் சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.