வலிவலம் அருகே வீட்டுச் சுவா் சனிக்கிழமை இடிந்து விழுந்ததில் ஒருவா் காயமடைந்தாா்.
அனக்குடி ஊராட்சி சுந்தரபாண்டியம் மேலத்தெருவைச் சோ்ந்தவா் அய்யாரு மகன் சுகுமாா் (40). தொடா்மழையால் வலுவிழந்த இவரது வீட்டிச் சுவா் சனிக்கிழமை இடிந்து விழுந்தது.
இதில் காயமடைந்த சுகுமாா் திருக்குவளை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வலிவலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.