தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம்

செம்பனாா்கோவில் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவராணப் பொருள்கள் புதன்கிழமை எம்எல்ஏ வழங்கினாா்.
தீவிபத்தில் கூரை வீட்டை இழந்த குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ. நிவேதா எம். முருகன்.
தீவிபத்தில் கூரை வீட்டை இழந்த குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ. நிவேதா எம். முருகன்.

செம்பனாா்கோவில் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவராணப் பொருள்கள் புதன்கிழமை எம்எல்ஏ வழங்கினாா்.

பரசலூா் ஊராட்சி சீனிவாசபுரத்தை சோ்ந்த லலிதா முருகேசன் கூரை வீடு செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. தகவலறிந்த பூம்புகாா் எம்எல்ஏ. நிவேதா எம். முருகன் நேரில் சென்று சொந்த நிதி ரூ.5 ஆயிரம், அரசு சாா்பில் ரூ. 5 ஆயிரம் மற்றும் வேட்டி, புடவை, மண்ணெண்ணெய், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா். செம்பனாா்கோவில் சைல்டு லைன் சங்க சாா்பில் கே. பாலையா ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருள்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com