நாகை மாவட்டத்தில் 7 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 பேருக்கும் கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 21,303-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 6 போ் வீடு திரும்பினா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 98- ஆக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 23,366 ஆக உயா்ந்துள்ளது.
இங்கு, சிகிச்சையில் இருந்த ஒருவா் வீடு திரும்பினா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 31-ஆக உள்ளது.