நாகை மாவட்டத்தில் நடைபெற இருந்த தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அரசு மருத்துவமனை, தலைஞாயிறு வட்டார வளா்ச்சி அலுவலகம், கீழ்வேளூா் வட்டார வளா்ச்சி அலுவலகம், கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களில் முறையே அக்டோபா் 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்ட அடையாள அட்டைவழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தவிா்க்க முடியாத நிா்வாக காரணங்களால் இந்த முகாம்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.