தூக்கில் தொங்கிய நிலையில் அடையாலம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையில் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா்.

வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையில் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா்.

கோடியக்கரை முழுக்குத்துறை கடற்கரைக்கு செல்லும் சாலையில் காட்டுக்குள் ஒரு மரத்தில் வேட்டியில் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் சுமாா் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருந்தது தெரிய வந்தது. அருகில் இரு பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்கள் இருந்தன. எனினும், இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. தகவலறிந்த வேதாரண்யம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி அதே இடத்தில் உடற்கூறாய்வு செய்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com