வேதாரண்யம் பகுதியில் கடலோரத்தில் நிலவும் வெளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.
வேதாரண்யத்தின் தெற்கு கடலோரப் பகுதியான கடிநெல்வயல், தென்னடாா், வாய்மேடு சுற்றுப் பகுதி கிராமங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மழை பெய்தது. ஆனால், இந்த மழை பரவலாக இல்லை. எனினும் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை மந்தமான வானிலையே நிலவியது. கரியாப்பட்டினம் சுற்றுப்பகுதியில் மழை சற்று அதிகமாக பெய்தது.