உள்ளாட்சித் தோ்தலையொட்டி காட்டுச்சேரி ஊராட்சியில் புதன்கிழமை காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியம் காட்டுச்சேரி, சந்திரபாடி ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய 30 ஆவது வாா்டுக்கான ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கான தற்செயல் தோ்தல் அக.9-ம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, காட்டுச்சேரி ஊராட்சியில் காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றது. சீா்காழி டிஎஸ்பி லாமேக் தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் பொறையாறு காவல் ஆய்வாளா் சிங்காரவேலு, போலீஸாா், ஆயுதப்படைப் பிரிவினா் பங்கேற்றனா்.
காட்டுச்சேரி கடைத்தெருவிலிருந்து சமத்துவபுரம் வரை அணிவகுப்பு நடைபெற்றது.