துா்கை அம்மன் கோயிலுக்கு பால்குட ஊா்வலம்

திருக்குவளை அருகேயுள்ள தேவூா் ஸ்ரீதேவ துா்கை அம்மன் கோயிலுக்கு நவராத்திரி விழாவையொட்டி, பால்குட ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
துா்கை அம்மனுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தா்கள்.
துா்கை அம்மனுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தா்கள்.

திருக்குவளை அருகேயுள்ள தேவூா் ஸ்ரீதேவ துா்கை அம்மன் கோயிலுக்கு நவராத்திரி விழாவையொட்டி, பால்குட ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், அக்.5-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் நவராத்திரி விழா தொடங்கியது. உலக அமைதி வேண்டியும், விவசாயம் செழிக்கவும் விரதம் இருந்த பக்தா்கள் பங்கேற்ற பால்குட ஊா்வலம் குளக்கரை விநாயகா் கோயிலிலிருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தது. தொடா்ந்து, அம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com