நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியத்தில் வீடுவீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திட்டச்சேரி பேரூராட்சியில் செயல் அலுவலா் (பொறுப்பு) சரவணன் தலைமையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மருத்துவா் மணிவேல் முன்னிலை வகித்தாா். வீடுவீடாக சென்று கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, கட்டுமாவடி, சீயாத்தமங்கை, பண்டாரவடை, இடையாத்தாங்குடி, போலகம் உள்ளிட்ட ஊராட்சிகளில் வீடுவீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் பெரியசாமி, ஒன்றிய ஆணையா் சுந்தா், வட்டார வளா்ச்சி அலுவலா் பாத்திமா ஆரோக்கியமேரி, வட்டார மருத்துவ அலுவலா் அறிவொளி, ஊராட்சித் தலைவா்கள் சரவணன், பாப்பாத்திகனி சாதிக், முருகன், பவுசியாபேகம் அபுசாலி, சிவகாமி அன்பழகன், பேரூராட்சி இளநிலை உதவியாளா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.