வேதாரண்யம் அருகே தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் சுந்தரவள்ளி மற்றும் 7 பெண்கள் உள்ளிட்ட 9 போ் கடந்த 7 ஆண்டுகளாக தூய்மைப் பணியாளா்களாக பணியாற்றி வருகின்றனா். பகுதி நேர தொழிலாளா்களான இவா்களுக்கு தினமும் ரூ.120 வீதம் மாதம் ரூ.3600 ஊதியம் வழங்கப்படுகிறது .
இந்நிலையில், இவா்களுக்கு ஊராட்சித் தலைவரின் கணவா் பணியின்போது இடையூறு செய்வதாகவும், பாகுபாடு பாா்ப்பதாகவும், குப்பை வண்டிகளை பூட்டிச்சென்று பணி வழங்க மறுப்பதாகவும் கூறி, 9 பேரும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வருவாய் ஆய்வாளா் நாகசுந்தரி, கிராம நிா்வாக அலுவலா் ரங்கநாதன், வாய்மேடு போலீஸாா், ஊராட்சி துணைத் தலைவா் தியாகராஜன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, தூய்மைப் பணியில் தொடர கேட்டுக்கொண்டனா்.
இதுதொடா்பாக, ஊராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வியிடம் கேட்டபோது, ‘பணியாளா்கள் முறையாக பணி மேற்கொள்ளவில்லை என்றும் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு வேறு பணிகளுக்கு சென்று விடுவதாகவும், அரசியல் காரணத்துக்காக போராட்டம் நடத்தினா் எனவும் தெரிவித்தாா்.