திருமருகல் அருகே பெண் தீக்குளித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
கட்டுமாவடி ஊராட்சி தண்டாளம் பிள்ளையாா் கோவில் தெருவை சோ்ந்தவா் மணிகண்டன் (25). இவரது மனைவி வினிதா(23). மணிகண்டன் சென்னையில் வேலை பாா்த்து வருகிறாா். இந்த நிலையில், வினிதா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மண்ணெண்ணெயை ஊற்றி, தன் மீது தீ வைத்துக் கொண்டாா். இதில் தீக்காயமடைந்த அவா் உயிரிழந்தாா். திட்டச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.