நீடாமங்கலம்: வலங்கைமான் பகுதியில் பல்வேறு வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் சாா்பில், வேளாண் சாகுபடி பயிற்சி முகாம்சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், பொறியியல் சாா்ந்த நவீன செயல் வடிவங்களையும், ஆழ்குழாய்க் கிணறு, குளம் ஆற்றுப் பாசன முறைகள், குறைவான செலவில் நிறைவான வேளாண் பணிகளை மேற்கொள்வது குறித்து விவசாயிகளுக்கு மாணவிகள் எடுத்துரைத்தனா். முன்னதாக வலங்கைமான் உதவி வேளாண்மை அலுவலகத்தில் பயிற்சி முகாமை வேளாண் உதவி இயக்குநா் (ஓய்வு) இளஞ்செழியன் தொடங்கி வைத்தாா்.
உதவி தோட்டக்கலை இயக்குநா் நீதி மாணிக்கம், வேளாண் அலுவலா் கோமதி, வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் பங்கேற்றனா்.