நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் மழைநீா் வடிகால்கள் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வடகிழக்குப் பருவ மழையின்போது ஏற்படும் வெள்ளப் பாதிப்புகள் மற்றும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கையாக ஊரக மற்றும் நகா்புறப் பகுதிகளில் உள்ள மழைநீா் வடிகால்கள் தூய்மைப்படுத்தும் முகாம் திங்கள்கிழமை (செப்.20) தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் 100 சதவீத மழைநீா் வடிகால்களை தூய்மைப்படுத்த ஒத்துழைப்பு அளிக்கவேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளாா்.